அடுத்த ஆட்டம் வரும் ஞாயிறு
எதிரணி : BELIVERS CC
இதுவரை :9 வெற்றி :5 தோல்வி :4
மைதானம் : சிவானந்த மில்ஸ்
OUR SECRET OF SUCCESS " NO GIVE UP "

Tuesday, February 22, 2011

பௌளேர்களின் எழுச்சியால் வெற்றி

பிப் 20 ஞா: கடந்த எட்டு ஆட்டங்களுக்கு பிறகு வெற்றியை ருசித்தோம்.

டாஸ் வென்ற எங்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 98 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தோம். மேல் வரிசை மட்டை வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையிலும் தனி ஒருவராக போராடி, கடைசி வரை களத்தில் நின்று சிவகுமார் அடித்த 25 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது எங்கள் வெற்றிக்கு உதவியது.


பாட்டிங்கில் அசத்திய சிவகுமார்
அடுத்து இறங்கிய எதிரணி வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்கு எடுத்த ரன்கள் 58 நான்கு விக்கெட் இழப்பிற்கு.புதிய பௌலர் சதீஷ் குமார் இதில் இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.
இதில் அடுத்த 42 பந்துகளுக்கு 40 ரன்கள் என்ற நிலையில், நமது கேப்டன், மற்றும் கிரி அவர்களின் பந்து வீச்சில் அனல் தெறித்தது.அடுத்த நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட் கைப்பற்றினாலும், ரன்களும் குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக மூன்று ஓவர்களுக்கு 18 ரன்கள் என்ற நிலையில், கேப்டன் வீசிய அந்த ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் தான் போனது.அடுத்து கிரி வீசிய ஓவர் மெய்டேன்.மிக சிறப்பான அந்த ஓவரில் ஒரு பந்து கூட எதிரணி வீரரின் பாட்டில் படவில்லை. இறுதி ஓவரின் முடிவில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற நிலையில் கேப்டன் ஒரே ஒரு ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றி பெற்றோம்.

பெளலிங்கில் அசத்திய கிரி தியாகு [கேப்டன்] சதீஸ்

Sunday, February 6, 2011

ஒரே நாளில் மிகுந்த சந்தோசம் மற்றும் மிகுந்த துயரம் !!!!

நேற்று என்றும் போல் மட்டை வீச சென்றோம் ஆனால் நேற்று மட்டைகள் புதிதாக வாங்கி புதிய பலத்துடன் சென்றோம் !அதன் விளைவு எதிர்பார்க்காத அளவிற்கு எங்கள் அணி மிக அற்புதமாக மட்டை வீசினார்கள் அணி மிக அற்புத இலக்கை எட்டினோம். 146 ரன்களை வெறும் நூறு பந்துகளுக்கு வீசினோம். புதிய மட்டை என்பதாலோ என்னமோ எங்கள் அணி மட்டை வீசுபவர்கள் மிக அற்புதமாக விளாசினார்கள். மிகுந்த மகிழ்ச்சியில் எங்கள் அணி இருந்தது. நேற்றைய ஆட்டம் முழுவதும் நான்கும் ஆறுமாக சென்றது. இவை அனைத்துக்கும் முக்கிய நன்றி கூறி கொள்கிறோம்.எங்கள் அணியின் சார்பாக எங்கள் அணியின் சிறந்த ஆட்டக்காரர்கள் Mr . சரவணகுமார் மற்றும் ஜுடு. இவர்கள் அவர்களுடைய திறமை அனைத்தையும் போதும் போதும் என்ற அளவிற்கு வெளிகாட்டினர்கள். இவை அனைத்தும் ஒரு மணித்துளிகளில் களைந்துவிடும் என்று எங்கள் அணியினர் என்னவில்லை. எங்கள் மட்டை வீச்சு திறமையை நேற்று நாங்களே நன்று அறிந்துகொண்டோம். அதேபோல் பந்து வீச்சாளரின் திறமையும் எங்களுக்கு தெரிந்தது.

அடுத்து பந்து வீச்சை பற்றி பேசுவோம், எங்களால் மட்டை மற்றும் பந்து கடையில் எளிதாக வாங்க முடிந்தது இந்த பாலாய் போன பந்துவீச்சாளரை வாங்கவே முடியவில்லை எந்த கடையில் கேட்டும் கிடைக்கவில்லை. ஆகையால் நேற்றைய ஆட்டத்தை நங்கள் இழந்தோம் இது எங்கள் தவறு இல்லை கடைக்காரர் தவறு. அவர் வாடிக்கையாளரை திருப்தி படுத்த தவறிவிட்டார். ஆகையால் நங்கள் எங்கள் அணியீன் leegal advicer உடன் ஆலோசனை பெற்று அணைத்து ஸ்போர்ட்ஸ் ஷாப் காரர்கள் சங்கம் அல்லது கடைகள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை "எதிர் அணி" மன்னிக்கவும் "எதிரி அணியினர்" நான்கும் ஆறுமாக விளாசி வெற்றி அடைத்தனர். உண்மையாக எங்கள் பாராட்டுக்கு உரியவர்கள் தன் அவர்கள். இருந்தபோதிலும் அவர்கள் மட்டையாலும் பந்தினாலும் மட்டும் விளையாடாமல் வாய்ஜாலமாகவும் நிறைய விளையாடினார்கள். எது எப்படியோ நேற்றைய ஆடம் எங்களுடையது அவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்தோம். நேற்றைய ஆட்டத்தின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது நாங்கள் மட்டை பந்து விளையாட தகுதி அற்றவர்கள் என்பது மட்டும்தான். இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் எண்ணங்களை மாற்ற மாட்டோம் நாங்கள் முயற்சியை விடாமல் வெற்றி அடைய பாடுபடுவோம். "முயற்சி திருவினை ஆக்கும்" என்பதை நாங்கள் நன்று அறிவோம். ஆகையால் இனிமேலாவது நாங்கள் நல்ல ஐந்து பந்து வீச்சாளர் உடன் களம் இறங்குவோம் என்று உறுதிமொழி எடுத்துகொள்கிறோம்.

எடுத்துகாட்டு: குரங்கு மரத்தில் இருந்து விழுந்தால் கீழே உள்ள குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்திரிக்கும் ஏனென்றால் அது விழுந்தால் அதன் கூட்டத்தினர் அதன் அணியில் சேர்த்து கொள்ளாதது என்பதற்காக. எங்களுக்கு அதுபோன்ற ஒரு காரணம் கூட நேற்றைய ஆட்டத்தில் கிடைக்கவில்லை.

பின் குறிப்பு: நாங்கள் எங்கள் அணியில் அதுபோன்று செய்ய மாட்டோம் ஏனென்றால் நாங்கள் மனித இனம் அது மிருகம் அதற்கு ஐந்து அறிவு எங்களுக்கு ஆறு ஆறு ஆறு !!!!!!!!!!!

இந்த ஆட்டம் தோல்வியில் முடிய கரணம் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் நாங்கள் உண்மை காரணங்களை பதிவு செய்கிறோம். தவறுதலுக்கு வருந்தவும் அணி வீரர்களும் மற்றும் எங்களை மதித்து எங்கள் blog படிப்பவர்களும்


* இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக பதியபடவில்லை அப்படி ஏதேனும் புண்படுத்தி இருந்தால் மனிக்கவும். இந்தபதிவு நாம் இனிவரும் நாளில் இதுபோன்ற தவறுகளை மறுபடியும் செய்யவேண்டாம் என்பதற்காக.