அடுத்த ஆட்டம் வரும் ஞாயிறு
எதிரணி : BELIVERS CC
இதுவரை :9 வெற்றி :5 தோல்வி :4
மைதானம் : சிவானந்த மில்ஸ்
OUR SECRET OF SUCCESS " NO GIVE UP "

Tuesday, February 22, 2011

பௌளேர்களின் எழுச்சியால் வெற்றி

பிப் 20 ஞா: கடந்த எட்டு ஆட்டங்களுக்கு பிறகு வெற்றியை ருசித்தோம்.

டாஸ் வென்ற எங்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 98 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தோம். மேல் வரிசை மட்டை வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையிலும் தனி ஒருவராக போராடி, கடைசி வரை களத்தில் நின்று சிவகுமார் அடித்த 25 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது எங்கள் வெற்றிக்கு உதவியது.


பாட்டிங்கில் அசத்திய சிவகுமார்
அடுத்து இறங்கிய எதிரணி வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்கு எடுத்த ரன்கள் 58 நான்கு விக்கெட் இழப்பிற்கு.புதிய பௌலர் சதீஷ் குமார் இதில் இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.
இதில் அடுத்த 42 பந்துகளுக்கு 40 ரன்கள் என்ற நிலையில், நமது கேப்டன், மற்றும் கிரி அவர்களின் பந்து வீச்சில் அனல் தெறித்தது.அடுத்த நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட் கைப்பற்றினாலும், ரன்களும் குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக மூன்று ஓவர்களுக்கு 18 ரன்கள் என்ற நிலையில், கேப்டன் வீசிய அந்த ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் தான் போனது.அடுத்து கிரி வீசிய ஓவர் மெய்டேன்.மிக சிறப்பான அந்த ஓவரில் ஒரு பந்து கூட எதிரணி வீரரின் பாட்டில் படவில்லை. இறுதி ஓவரின் முடிவில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற நிலையில் கேப்டன் ஒரே ஒரு ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றி பெற்றோம்.

பெளலிங்கில் அசத்திய கிரி தியாகு [கேப்டன்] சதீஸ்

Sunday, February 6, 2011

ஒரே நாளில் மிகுந்த சந்தோசம் மற்றும் மிகுந்த துயரம் !!!!

நேற்று என்றும் போல் மட்டை வீச சென்றோம் ஆனால் நேற்று மட்டைகள் புதிதாக வாங்கி புதிய பலத்துடன் சென்றோம் !அதன் விளைவு எதிர்பார்க்காத அளவிற்கு எங்கள் அணி மிக அற்புதமாக மட்டை வீசினார்கள் அணி மிக அற்புத இலக்கை எட்டினோம். 146 ரன்களை வெறும் நூறு பந்துகளுக்கு வீசினோம். புதிய மட்டை என்பதாலோ என்னமோ எங்கள் அணி மட்டை வீசுபவர்கள் மிக அற்புதமாக விளாசினார்கள். மிகுந்த மகிழ்ச்சியில் எங்கள் அணி இருந்தது. நேற்றைய ஆட்டம் முழுவதும் நான்கும் ஆறுமாக சென்றது. இவை அனைத்துக்கும் முக்கிய நன்றி கூறி கொள்கிறோம்.எங்கள் அணியின் சார்பாக எங்கள் அணியின் சிறந்த ஆட்டக்காரர்கள் Mr . சரவணகுமார் மற்றும் ஜுடு. இவர்கள் அவர்களுடைய திறமை அனைத்தையும் போதும் போதும் என்ற அளவிற்கு வெளிகாட்டினர்கள். இவை அனைத்தும் ஒரு மணித்துளிகளில் களைந்துவிடும் என்று எங்கள் அணியினர் என்னவில்லை. எங்கள் மட்டை வீச்சு திறமையை நேற்று நாங்களே நன்று அறிந்துகொண்டோம். அதேபோல் பந்து வீச்சாளரின் திறமையும் எங்களுக்கு தெரிந்தது.

அடுத்து பந்து வீச்சை பற்றி பேசுவோம், எங்களால் மட்டை மற்றும் பந்து கடையில் எளிதாக வாங்க முடிந்தது இந்த பாலாய் போன பந்துவீச்சாளரை வாங்கவே முடியவில்லை எந்த கடையில் கேட்டும் கிடைக்கவில்லை. ஆகையால் நேற்றைய ஆட்டத்தை நங்கள் இழந்தோம் இது எங்கள் தவறு இல்லை கடைக்காரர் தவறு. அவர் வாடிக்கையாளரை திருப்தி படுத்த தவறிவிட்டார். ஆகையால் நங்கள் எங்கள் அணியீன் leegal advicer உடன் ஆலோசனை பெற்று அணைத்து ஸ்போர்ட்ஸ் ஷாப் காரர்கள் சங்கம் அல்லது கடைகள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை "எதிர் அணி" மன்னிக்கவும் "எதிரி அணியினர்" நான்கும் ஆறுமாக விளாசி வெற்றி அடைத்தனர். உண்மையாக எங்கள் பாராட்டுக்கு உரியவர்கள் தன் அவர்கள். இருந்தபோதிலும் அவர்கள் மட்டையாலும் பந்தினாலும் மட்டும் விளையாடாமல் வாய்ஜாலமாகவும் நிறைய விளையாடினார்கள். எது எப்படியோ நேற்றைய ஆடம் எங்களுடையது அவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்தோம். நேற்றைய ஆட்டத்தின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது நாங்கள் மட்டை பந்து விளையாட தகுதி அற்றவர்கள் என்பது மட்டும்தான். இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் எண்ணங்களை மாற்ற மாட்டோம் நாங்கள் முயற்சியை விடாமல் வெற்றி அடைய பாடுபடுவோம். "முயற்சி திருவினை ஆக்கும்" என்பதை நாங்கள் நன்று அறிவோம். ஆகையால் இனிமேலாவது நாங்கள் நல்ல ஐந்து பந்து வீச்சாளர் உடன் களம் இறங்குவோம் என்று உறுதிமொழி எடுத்துகொள்கிறோம்.

எடுத்துகாட்டு: குரங்கு மரத்தில் இருந்து விழுந்தால் கீழே உள்ள குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்திரிக்கும் ஏனென்றால் அது விழுந்தால் அதன் கூட்டத்தினர் அதன் அணியில் சேர்த்து கொள்ளாதது என்பதற்காக. எங்களுக்கு அதுபோன்ற ஒரு காரணம் கூட நேற்றைய ஆட்டத்தில் கிடைக்கவில்லை.

பின் குறிப்பு: நாங்கள் எங்கள் அணியில் அதுபோன்று செய்ய மாட்டோம் ஏனென்றால் நாங்கள் மனித இனம் அது மிருகம் அதற்கு ஐந்து அறிவு எங்களுக்கு ஆறு ஆறு ஆறு !!!!!!!!!!!

இந்த ஆட்டம் தோல்வியில் முடிய கரணம் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் நாங்கள் உண்மை காரணங்களை பதிவு செய்கிறோம். தவறுதலுக்கு வருந்தவும் அணி வீரர்களும் மற்றும் எங்களை மதித்து எங்கள் blog படிப்பவர்களும்


* இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக பதியபடவில்லை அப்படி ஏதேனும் புண்படுத்தி இருந்தால் மனிக்கவும். இந்தபதிவு நாம் இனிவரும் நாளில் இதுபோன்ற தவறுகளை மறுபடியும் செய்யவேண்டாம் என்பதற்காக.

Sunday, October 10, 2010

மீண்டும் வெற்றி பாதையில்



மழை,மற்றும் சில சின்ன பிரச்சனைக்காக ஒரு மாதமாக விளையாட போகாம, நேத்து போய் விளையாண்டோம்.நல்ல டீம்-ஸ்ப்ரிட்டோட விளையாண்டோம். நாங்க அவுட் ஆப் பார்ம்ல இருந்தப்ப தொடர்ந்து இரண்டு வாரம் எங்களை கேவலமா தோற்கடிச்ச, மேட்ச் முடிஞ்ச உடனே எங்களுக்கு கை கொடுத்த, எங்களை கடுப்பு பண்ணின BELEIVERS டீம் கூட மேட்ச். 17 ஓவர் மேட்ச். வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம். அவங்களும் வழக்கம் போல டாஸ் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்க, பாட்டிங் தான் எடுத்தாங்க.

ஆரம்பம் முதலே பௌலிங்ல அசத்திய நம்ம பயபுள்ளைக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்த வண்ணம் இருந்தாங்க.அதிலும் குறிப்பா எல்லாரும் நல்லா பீல்டிங் பண்ணினாங்க.மொத்தம் ஐந்து கேட்ச் பிடிச்சாங்க. அதிலயும் ஜூடு,சதீஷ் இரண்டு பேரும் கஷ்டமான கேட்ச்சை மிக லாவகமாக பிடித்தார்கள்.ஆக மொத்தம் 86 ரன்க்கு ஆல்-அவுட். பௌலிங் போட்ட ஐந்து பேரும் தலா இரண்டு விக்கெட் எடுத்தாங்க.

416911_33_preview.jpg?ITEM_ENT_ID=

ஓவருக்கு 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நம்ம பசங்க அட்டகாசமா விளையாண்டு மூன்று ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றனர்.

ஸ்கோர் கார்டு

ஜூடு 23 ரன்கள்
சதீஷ் 15 ரன்கள்
தினகரன் 12 ரன்கள் 7 பந்துகளில்

இந்த வார அறிமுகம் :அதிரடி ஆட்டக்காரர் தினகரன்

தினகரன் 12 ரன்கள் 7 பந்துகளில்.அதுக்கு மேல அடிக்கிறதுக்கு ரன்ஸ் இல்ல. போய் இறங்குனதுல இருந்து செம அடி. WELCOME TO OUR TEAM.

இந்த வார நாயகன் : ஜூடு பாட்டிங் 23 ரன்கள் பௌலிங் 2 விக்கெட்


அடுத்த வாரம் ஒரு CORK BALL - TOURENMENT.64 டீம் விளையாடுறாங்க. நம்ம ஆளுகளும் விளையாட போறாங்க. பொறுத்து இருந்து பாப்போம். என்ன நடக்குதுன்னு.

ALL THE BEST GUYS

Sunday, August 22, 2010

மழை மழை



ஆகஸ்ட் 15 , 22 ஞாயிறு : கடந்த இரண்டு வாரங்களாக கடும் மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது.



எங்களோட மைதானத்தின் நிலைமை சேரும் சகதியுமாக மாறியது.

Monday, August 2, 2010

கிலி கொடுத்த கில்லி அணியினர்

ஆகஸ்ட் 01 ஞாயிறு : அட கில்லி பாய்ஸ் கூடயும் தோத்துட்டோம்.
முதலில் பேட் செய்த கில்லி அணியினர் 100 பந்துகளுக்கு 123 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகினர். கிரி மொத்தம் முன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். மூன்றுமே போல்ட்.இந்த வாரம் அவன் பந்து வீச்சில் அனல் தெறித்தது.

_42424712_cricket_416.jpg
கிரி வீசிய பந்து இதை போன்றதொரு அருமையான போல்ட்

வழக்கம் போல நாங்க பேட் செய்து 98 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது.ஒரு 100 ரூபாய் போச்சு.

Tuesday, July 27, 2010

மின்னல் அடி

ஜூலை 25 ஞாயிறு : இந்த வாரம் எங்க டீம் வரலாற்றிலேயே முதல் முறையா 20 ஓவருக்கு 190 ரன் கொடுத்தோம். எல்லா பௌலேர்களும் நல்ல போடுறதுக்கே முயற்சி பண்ணினாலும், அத ரொம்ப ஈஸிஆ பௌண்டரிக்கு அடிச்சு, கொஞ்சம் கூட பாவம் பார்க்கமா 190 ரன் அடிச்சாங்க.நாங்க அடுத்த இன்னிங்க்ஸ் பத்தி சொல்லவே வேணாம். ஒரு 107 ரன் அடிச்சோம் 14 ஓவருக்கு. அடிச்சு சேஸ் பண்ணலாம் ன்னு ஆல்-அவுட் பண்ணிடாங்க.

இவங்க கூட இப்ப தான் முதல் முறையா ஆடுறோம்.எங்க டீம் மேனேஜர் ஒரு மிக சிறந்த அறிவாளி. இன்னும் நாலு வாரத்துல ஆஸ்திரேலியா கூட மேட்ச் ஆடினோம் ன்னு எழுதினாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல. யாரு என்னன்னு விசாரிக்காம மேட்ச் பிக்ஸ் பண்ணிறாங்க. உள்ள போய் விளையாடுறது யாரு.என்னா அடி அடிக்கிறாங்க.அதனால அடுத்த வாரம் எங்க அடிமை பசங்க கில்லி பாய்ஸ் கூட விளையாட போறோம். கண்டிப்பா அடுத்த வாரம் ஜெயிச்சுடுவோம்.

Tuesday, July 20, 2010

வெற்றிக்கான முதல் படியின் குறிப்பு



அதிகமான வேலை பளு காரணமாக எங்களின் விளையாட்டை தொடர்ந்து எழுத முடியாததிற்கு வருந்துகிறோம். கடந்த ஐந்து ஆட்டங்களை பற்றி ஒரு சின்ன குறிப்பு.

ஜூலை ஞாயிறு 12 ,19 , 26: வழக்கம் போல இந்த மூன்று வாரமும் தோத்துட்டோம்.

ஜூலை ஞாயிறு 3: இந்த வாரம் பௌலர்களோட எழுச்சியால் வின் பண்ணிட்டோம். பால் போடுறதுக்கே ஆள் இல்லாம பரிசோதனை முயற்சிக்காக ஜுடுக்கு பௌலிங் கொடுத்ததுக்கு மிக சிறப்பா பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆக டீம்க்கு ஒரு புது ஆல்ரௌண்டர்.

அசத்தலான பந்து வீசிய ஜூடு
ஜூலை ஞாயிறு 10,17 : திருப்பவும் பழையபடி தோற்க ஆரம்பிச்சுடோம்.விளையாடரதுக்கே ஆள் இல்ல.பத்து பேர வச்சு விளையாண்டதுனால தான் இந்த தோல்வி.

என்னடா திடீர்ன்னு இப்டி தோத்தது எல்லாம் சேர்த்து எழுதுறாங்கன்னு நினச்சுடாதீங்க. because எதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணும்.நாங்களும் ஒரு நாள் சாதிச்சு காட்டுவோம்.

அறிவிப்பு : மோசமான பார்ம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக சிராஜ் , ராம்குமார் ஆகியோர் அணியில் இருந்து நீக்க படுகின்றனர். இதனால் தான் பத்து பேர வச்சு விளையாண்டோம்.